சாலையை சீரமைக்கக் கோரிக்கை

வலங்கைமானில் சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமானில் சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த மாதம் பெய்த பருவம் தவறிய மழையால், வலங்கைமான் கடைவீதி நடுவில் பாபநாசம் சாலை மற்றும் குடவாசல் சாலை இணையும் இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், அடிக்கடி சிறுசிறு விபத்து நேரிடுகிறது.

பங்குனி மாதத்தில் வலங்கைமானில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவின் போது, சேதமடைந்துள்ள இந்த சாலையில்தான் அம்பாள் சுவாமி முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com