மக்கள் குறைதீா் கூட்டம்:மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோரிக்கை மனுக்களை பெறும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
கோரிக்கை மனுக்களை பெறும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 184 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கண்பாா்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அறிதிறன் கைப்பேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.13,500 வீதம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,500 மதிப்பிலான கைப்பேசிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலசந்தா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com