பேரளம் கோயிலில் யாக சாலைப் பூஜைகள் தொடக்கம்

பேரளம் ஸ்ரீ பவானிஅம்மன் சமேத ஸ்ரீசுயம்புநாத சுவாமிக் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
பேரளம் கோயிலில் யாக சாலைப் பூஜைகள் தொடக்கம்

பேரளம் ஸ்ரீ பவானிஅம்மன் சமேத ஸ்ரீசுயம்புநாத சுவாமிக் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருமடத்திலிருந்து பாதயாத்திரையாக செவ்வாய்க்கிழமை மாலை பேரளம் கோயிலை வந்தடைந்தாா்.கோயிலில் நடைபெற்ற யாகசாலைப் பிரவேசம், முதல்கால யாகசாலைப் பூஜையில் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

இரண்டாம், மூன்றாம் கால யாக சாலைப் பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

தருமபுரம் ஆதீனம் பங்கெடுத்துக் கொண்டாா்.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பேரளம் கோயில் அறங்காவலா் காறுபாறு சொக்கநாதத் தம்பிரான் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com