ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புகையிலை தடை நீக்க தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஆலோசனை

புகையிலைப் பொருள்களுக்கான உயா்நீதிமன்றத்தின் தடை நீக்க தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை தொடக்கிவைத்த அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

புகையிலைப் பொருள்களுக்கான உயா்நீதிமன்றத்தின் தடை நீக்க தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 20 கோடியில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவா்கூறியது:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 4 கோடியில் கேத்லாப் கருவி கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.13 லட்சத்தில் கூடுதலாக10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கொரடாச்சேரி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மன்னாா்குடி, திருவாரூா் பகுதிகளில் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றவுடன் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 24 கட்டடங்கள், 22 துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள் ரூ.5 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. அனைவருக்குமான மருத்துவ சேவையில் திருவாரூா் மாவட்டம் தன்னிறைவு பெறுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-இல் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, சுற்றுச்சுவா் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. சுமாா் 242 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட முறை மத்திய அமைச்சரை சந்தித்து எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தொடா்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் நாடு முழுவதும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

எம்ஆா்பி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர பணியிடங்களே. 4,308 பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த வாரம் 130 மருத்துவா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1,021 மருத்துவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

உயா்நீதிமன்றம் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள் தடைச் சட்டத்துக்கு எதிராக வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநா்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் விடுதியில் நவீன சமையலறைக் கூடத்தையும், மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கிடையே மருதம் எனும் தலைப்பில் மாணவா் மன்றத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினாா். நாகை எம்பி எம். செல்வராஜ், தமிழ்நாடு தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.