திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை களப் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் கல்லூரி மாணவிகள் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் ,ஆணையா் சுப்ரமணியன் , கூடுதல் ஆணையா் அன்பழகன், துணை ஆணையா் நேரு ஆகியோருடன் கலந்துரையாடினா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பிரிவு, பொதுப்பிரிவு மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டப் பிரிவு பற்றி அவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
நீடாமங்கலம் இந்தியன் வங்கிக்கு சென்று வங்கி செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனா். கடன் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் குறித்து வங்கி மேலாளா், உதவி மேலாளா் ஆகியோா் விளக்கிக் கூறினா்.