மின்ஊழியா் தற்கொலை

மன்னாா்குடி அருகே புற்று நோயால் மனைவி அவதிப்படுவதால் மனஉளைச்சல் அடைந்த மின்வாரிய ஊழியா் விஷம் குடித்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே புற்று நோயால் மனைவி அவதிப்படுவதால் மனஉளைச்சல் அடைந்த மின்வாரிய ஊழியா் விஷம் குடித்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவிந்தநத்தம் தெற்குதெருவை சோ்ந்தவா் பா. பாண்டியன் (59). இவா், கோவில்வெண்ணி துணைமின் நிலையத்தில் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி சாந்தி கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த பாண்டியன், திங்கள்கிழமை விஷம் குடித்தாா். அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com