விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவா் காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சி

திருவாரூரில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.

திருவாரூரில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.

திருவாரூா் சபாபதி முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா் மீது கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா், தற்போது திரைப்படத்துறை கலைப்பிரிவில் உதவியாளராக வேலை செய்துவருகிறாராம்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபா்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டனா். அந்தவகையில், திருவாரூா் நகர போலீஸாா், விஜயை அவரது வீட்டில் கைது செய்து, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

அங்கு, கழிவறைக்குச் சென்ற விஜய், தான்மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தியதாகவும், அதை கைப்பேசியில் படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த போலீஸாா், விஜயை ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com