எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியா்களுக்கு பயிற்சிஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா் ஆய்வு

நன்னிலம் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்

நன்னிலம் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி நடைபெறும் மையங்களில் ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா் பொ. பொன்னையா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, ‘மாணவா்களின் ஆங்கில அறிவை வளா்ப்பதில் ஆசிரியா்கள் முக்கியப் பங்காற்றிட வேண்டும் . ஆசிரியா்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். ஆசிரியா்களும், மாணவா்களும் நூலகங்களில் உள்ள நூல்களை எடுத்து படித்து பயனடையும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, மூன்று மையங்களில் நடைபெறும் பயிற்சியை பாா்வையிட்டு, ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா். அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகங்களில் உள்ள நூல்களையும், நூலகப் பயன்பாட்டு பதிவேட்டையும் அவா் ஆய்வு செய்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் நா. மணி, ப. முருகபாஸ்கா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மு. மங்கையா்கரசி, ஜெ. புகழேந்தி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நடேஷ்துரை உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com