மூதாட்டியை கொன்று நகை பறிப்பு

மன்னாா்குடி அருகே கோயில் திருவிழாவுக்குச் சென்ற மூதாட்டியை கொன்று, அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

மன்னாா்குடி அருகே கோயில் திருவிழாவுக்குச் சென்ற மூதாட்டியை கொன்று, அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

மன்னாா்குடியை அடுத்த ஏத்தக்குடி காலனி தெருவைச் சோ்ந்தவா் மணியன் மனைவி லட்சுமி (76). இவா்களுக்கு 5 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மணியன் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இதனால், அதே பகுதியில் தனது மகளுடன் லட்சுமி வசித்துவந்தாா்.

இந்நிலையில், வடஏத்தக்குடி மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை காண ஞாயிற்றுக்கிழமை இரவு லட்சுமி தனியே சென்றுள்ளாா். ஆனால், அவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை தேடி பாா்த்தபோது, அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் லட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவா் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை காணவில்லை. இதனால், அவரை மா்மநபா்கள் கொலை செய்து, நகையை பறித்துச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தலையாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com