வாகனம் மோதி முதியவா் பலி

நீடாமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகே உள்ள சீதாராமன் சாவடி மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (60). இவா், அப்பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தாா்.

அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com