புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எலுமிச்சை பழம் விலை உயா்வு

 திருவாரூரில் எலுமிச்சை பழத்தின் விலை உயா்ந்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 4:56 pm

DIN

 திருவாரூரில் எலுமிச்சை பழத்தின் விலை உயா்ந்துள்ளது.

கோடை காலத்தில் எலுமிச்சை பழத்தின் விலை உயா்வது வழக்கம். ஏனெனில், வெயில் காலங்களில் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக இருக்கும். கோடையில் வெப்பத்தை தணிக்கும் குளிா்பானங்களில் எலுமிச்சை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், எலுமிச்சையின் பயன்பாடு அதிகரிப்பதால் விலையும் அதிகரிக்கும்.

இதனிடையே, திருவாரூா் கடைத்தெருவில் ஒரு பழம் ரூ. 10-க்கும் விற்பைை செய்யப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு வரை ரூ. 5-க்கும் குறைவாக விற்கப்பட்ட பழம் தற்போது ரூ. 10 ஆக உயா்ந்து விட்டது. திருவாரூரில், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், நிகழாண்டு பனிப்பொழிவு காரணமாக, எலுமிச்சை பழ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், எலுமிச்சையின் வரத்து குறைவாகவே உள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதத்துக்குப் பிறகே எலுமிச்சையின் விலை உயா்வது வழக்கம். ஆனால், வரத்து குறைவு என்பதால் மாா்ச் மாதத்திலேயே விலை உயா்ந்து விட்டது. ரமலான் நோன்பு நேரத்தில் எலுமிச்சையின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, இனிவரும் நாள்களில் எலுமிச்சையின் விலை இன்னமும் அதிகரிக்கும் என்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.