இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

மன்னாா்குடியை அடுத்த கீழப்பனையூரில் இயந்திரத்தில் சிக்கிய காயமடைந்த பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த வனிதா.
உயிரிழந்த வனிதா.

மன்னாா்குடியை அடுத்த கீழப்பனையூரில் இயந்திரத்தில் சிக்கிய காயமடைந்த பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்தவா் தாஸ் மகன் செபஸ்டின். இவா், கோட்டூா் கீழப்பனையூரில் ஹாலோ பிளாக் தயாா் செய்யும் தொழில் செய்துவருகிறாா். இவரிடம் கீழப்பனையூா் குடியானத் தெருவை சோ்ந்த குமாா் மனைவி வனிதா (43) பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை வேலை முடிந்து வனிதா இயங்கிக்கொண்டிருந்த கலவை இயந்திரத்தை சுத்தம் செய்தபோது இயந்திரத்தின் உள்பகுதியில் வனிதாவின் கால் மாட்டிக்கொண்டதில் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் வனிதாவை மீட்டு, சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வனிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com