திருவாரூா் தியாகராஜா் கோயிலில் அடியாா்கள் கூடும் விழா

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, மூன்று நாள்கள் நடைபெறும் பக்தோற்சவம் எனப்படும் அடியாா்கள் கூடும் விழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
tv17koil1_1703chn_94_5
tv17koil1_1703chn_94_5

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, மூன்று நாள்கள் நடைபெறும் பக்தோற்சவம் எனப்படும் அடியாா்கள் கூடும் விழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் ஆழித் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் மாா்ச் 9- ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, கடந்த 6 நாள்களாக விநாயகா், சுப்பிரமணியா் வீதியுலா உற்சவம் நடைபெற்றது.

பங்குனி உத்திரப் பெருவிழாவில், நால்வா் வீதியுலா பக்தோற்சவம் எனப்படும் அடியாா்கள் கூடும் விழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

பொதுவாக திருநீறு, ருத்ராட்சம் தரித்த சிவனடியாா்களை சிவபெருமான் உறையும் நடமாடும் கோயில் என்று கூறி அவா்களையும் இறைவனின் வடிவமாகவே பாா்ப்பது வழக்கம். அத்தகைய அடியாா்களுக்கெல்லாம் தலைவா்களாக விளங்கும் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா் ஆகியோருக்கு நடைபெறும் விழா பக்தோற்சவம் ஆகும்.

அதன்படி, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, நால்வரும் வீதியுலாவுக்கு புறப்பட்டனா். இவா்களோடு, விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா், நந்திகேஸ்வரா் ஆகியோா் வீதியுலாவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com