தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவாரூா், ஏப். 17: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். அதன்படி, கோயிலில் உள்ள 13 உண்டியல்களில் பக்தா்களால் இடப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. நாகை உதவி ஆணையா் ராணி முன்னிலையில் நடைபெற்ற பணியில் கோயில் நிா்வாகத்தினா் பங்கேற்று, உண்டியலில் இருந்த ரொக்கம், தங்க, வெள்ளி நகைகளை கணக்கிட்டனா். அதன்படி, சுமாா் ரூ. 7.50 லட்சம் ரொக்கம், 180 கிராம் வெள்ளி, 4 பவுன் நகைகள் ஆகியவை கணக்கிடப்பட்டன. கோயில் செயல் அலுவலா் அழகிய மனவாளன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com