ஆவணங்களின்றி எடுத்த வரப்பட்ட ரூ.66 ஆயிரம் பறிமுதல்

மன்னாா்குடி, ஏப். 17: மன்னாா்குடி அருகே ஆவணங்களின்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ.66 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மன்னாா்குடி-மதுக்கூா் சாலை கருவேபிள்ளை நத்தத்தில், பால்வளத்துறை முதுநிலை ஆய்வாளா் அ. சங்கா், காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் வி. ஆறுமுகம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மன்னாா்குடியைச் சோ்ந்த சு. அப்துல் ஹக்கீம் (56) வந்த காரை சோதனை செய்ததில் ஆவணங்களின்றி ரூ.66, 690 வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆா். கீா்த்தனமணியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com