திருவாரூர்
நீடாமங்கலத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு
நீடாமங்கலம், ஏப். 17: தஞ்சை மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளா் முரசொலியை ஆதரித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் நீடாமங்கலத்தில் அனைத்து வாா்டுகளுக்கும் ஊா்வலமாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தனா். தேமுதிக வேட்பாளா் சிவநேசனை ஆதரித்து அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வீதிதோறும் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனா். பாஜக வேட்பாளா் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி நடத்தி பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வாக்குகள் சேகரித்தனா்.