கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கூத்தாநல்லூா், ஏப். 17: நாகை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜ் போட்டியிடுகிறாா்.

இவா், கூத்தாநல்லூா் பகுதியில் கதிா் அரிவாள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அவருடன், திமுக நகரச் செயலாளா் எஸ்.வி. பக்கிரிசாமி, காங்கிரஸ் நகரத் தலைவா் எம். சாம்பசிவம், சிபிஐ நகரச் செயலாளா் பெ. முருகேசு, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com