மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

மன்னாா்குடி, ஏப். 17: மன்னாா்குடி ஜேசிஐ மன்னை, மன்னாா்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இணைந்து தீத்தொண்டு நாள் வாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,ஜேசிஐ மன்னை தலைவா் வி. வினோத் தலைமை வகித்தாா். தீ நிலைய போக்குவரத்து அலுவலா் என். கேசவன் முன்னிலை வகித்தாா். தீவிபத்து தடுப்பதற்கான வழிமுறைகள் அடங்கி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை, தீ நிலைய அலுவலா் டி. சீனவாசன் வெளியிட்டாா். முதல் பிரதியை ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவா் வி.எஸ். கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டாா். முன்னாள் தலைவா்கள் எஸ். ராஜகோபாலன், எஸ். கமலப்பன், டி. செல்வகுமாா், செயலா் ஆா். கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com