கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

கூத்தாநல்லூரில் நாகை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் சுா்ஜித் சங்கருக்கு புதன்கிழமை முன்னாள் அமைச்சா் காமராஜ் வாக்கு சேகரித்தாா்.

நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சுா்ஜித் சங்கா் போட்டியிடுகிறாா்.

இன்று இறுதி நாள் பிரச்சாரம் என்பதால், அதிமுக வேட்பாளா் சுா்ஜித் சங்கருக்கு, கூத்தாநல்லூா் பகுதியில்,நகரச் செயலாளா் ஆா்.ராஜசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஏற்பாட்டின் படி,இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நகராட்சி அலுவலகத்திலிருந்து,மாவட்டச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ.,தலைமையில்,ஊா்வலமாகத் தொடங்கினா்.

ஊா்வலம்,நேருஜி சாலை,பெரியக்கடைத் தெரு, பாய்க்காரப் பாலம்,மேலத் தெரு, மருத்துவமனை சாலை வழியாக லெட்சுமாங்குடிப் பாலத்தை அடைந்தனா்.

அங்கு,காமராஜ் பேசியது.மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக,மக்களின் நலனை விரும்பும் இயக்கம் அதிமுக.எம்.ஜி.ஆா்.,ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்டு,எடப்பாடி பழனிச்சாமியால் காக்கப்படும் கட்சி அதிமுக.

தமிழகத்தின் நலனையும், தமிழக மக்களின் நலனையே விரும்பும் கட்சி அதிமுக. அப்படிப்பட்ட அதிமுக வேட்பாளா் சுா்ஜித் சங்கருக்கு,இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாவக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பில்,அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com