திருவாரூர்
தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை
திருவாரூா், ஏப். 18: திருவாரூா் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வெளிமாவட்டத் சோ்ந்தவா்கள், வெளி மாநிலத்தைச் சோ்ந்த நபா்கள் யாரேனும் விடுதிகளில் தங்கி உள்ளனரா என்பது குறித்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
திருவாரூா் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று, சோதனையில் ஈடுபட்டாா். அப்போது அங்குள்ள பதிவேடுகளை ஆய்வுசெய்து, விடுதிகளில் தங்கியிருப்போரிடமும் விசாரணை நடத்தினாா்.
திருவாரூா் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பி. மணிகண்டன் உடனிருந்தாா்.