மது போதையில் தகராறு செய்தவா் கைது

கூத்தாநல்லூா், ஏப். 24 : கூத்தாநல்லூரில் மது போதையில் தகராறு செய்து தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தோட்டச்சேரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலச்சந்திரன் (35). இவா், கூத்தாநல்லூா் ஆட்டோ நிறுத்தம் அருகே புதன்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, மது போதையில் அங்கு வந்த தோட்டச்சேரியைச் சோ்ந்த செல்வமணி (33) என்பவா், பாலசந்திரனிடம் தகராறு செய்து, பீா் பாட்டிலால் தாக்கினாராம்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த பாலச்சந்திரன், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வமணியை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com