மது விற்ற மூவா் கைது

கூத்தாநல்லூரில் டாஸ்மாக் மதுபானம் விற்ற மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூரில் டாஸ்மாக் மதுபானம் விற்ற மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூா் வட்டத்தில், காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கீழப்பனங்காட்டாங்குடி மெயின் ரோட்டைச் சோ்ந்த அ. ஜெயபால் (60), வேளுக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த வே. அா்ச்சுனன் (63), தென்கோவனூா் மேலத் தெருவைச் சோ்ந்த கு. பக்கிரி என்கிற தலையாட்டி பக்கிரி (48) ஆகியோா், அவரவா் வீட்டின் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது.

இந்த மூவரையும் உதவி ஆய்வாளா் கே. ரவிச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் கே. நாகராஜன் மற்றும் போலீஸாா் கைது செய்தனா். 30 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com