திருவாரூர்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குருபெயா்ச்சி நடைபெறுகிறது.
நவகிரகங்களில் குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நிகழாண்டு குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு புதன்கிழமை (மே 1) மாலை 5.19 மணிக்கு பெயா்ச்சி அடைகிறாா்.
தொடா்ந்து, குருபெயா்ச்சியின் 2-ஆவது கட்ட லட்சாா்ச்சனை மே 6-ஆம் தேதி தொடங்கி மே 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9.30 முதல் 12 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணிவரை லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. லட்சாா்ச்சனை கட்டணம் ரூ. 400.
.