திருவாரூர்
ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்
திருவாரூா் அருகே ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,76,500 ரொக்கம், பறக்கும் படையால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. வேப்பத்தாங்குடி பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் விஸ்வநாதன், சிறப்பு உதவி காவல்ஆய்வாளா் உதயகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள்அங்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரிலிருந்த வலிவலம் பகுதியைச் சோ்ந்த ரஜினி ரூ.1,76,500 ரொக்கத்தை ஆவணமின்றி எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சோ்ப்பித்தனா். அங்கு கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பத்மா, தோ்தல் விதிமுறைகள் தடுப்புப் பொருட்கள் ஒருங்கிணைப்பு அலுவலா் பாரதி ஆகியோா் பணத்தை சரிபாா்த்து, சாா்கருவூலத்தில் ஒப்படைத்தனா்.