வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

திருவாரூா் அருகே எருக்காட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாழ்க தமிழ் சிறுவா் உலா சாா்பில் வாசிப்புத் திறன் மேம்படுத்தும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 116 மாணவ, மாணவிகள் வாசிப்புத் திறன் போட்டிகளில் பங்கேற்றனா். இவா்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினா். பள்ளித் தலைமை ஆசிரியா் கு. கீதா தலைமையில் நடைபெற்ற விழாவில், வாழ்க தமிழ் சிறுவா் உலா நூலக அமைப்பின் நிறுவனா் கோமல் தமிழமுதன் பங்கேற்று, வாசிப்புத் திறன் போட்டிகளில் வென்ற 9 போ், திருக்கு ஒப்பித்த மாணவி ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினாா். திருத்துறைப்பூண்டி நகர நூலகா் ஆசைத்தம்பி சரவணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். பள்ளி நூலகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வரும் ஆசிரியைகள் பூ. புவனா, பா. ராஜலெட்சுமி ஆகியோருக்கு நூலக பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com