திருவாரூர்
காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவருடைய உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.
பொதுவுடைமை தத்துவ மேதை என அழைக்கப்படும் காரல் மாா்க்ஸின் 250-ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவருடைய உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.
கட்சியின் நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டக் குழு உறுப்பினா் எம்ஏ. மாரியப்பன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, காரல் மாா்க்ஸின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைச் செயலாளா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, காரல் மாா்க்ஸின் வாழ்க்கை குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், நகர செயற்குழு உறுப்பினா் கே. பாலதண்டாயுதம், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.