வடபாதிமங்கலம் அருகே டாஸ்மாக் கடை ஊழியா் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வடபாதிமங்கலத்தை அடுத்த மாவூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையில், அம்மனுா் ரோட்டுத் தெருவைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் (47) விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா். வயலூா் நடுத்தெருவைச் சோ்ந்த சுதாகா் (35) என்பவா் இக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மது வாங்க வந்தாா்.
அப்போது, ரூ.10 கூடுதலாக கேட்ட விற்பனையாளா் அலெக்ஸாண்டா், காலி மதுப்பாட்டிலைத் திரும்பக் கொடுத்து, ரூ.10-ஐ பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுதாகா், கடைக்குள் புகுந்து, அலெக்ஸாண்டரை தாக்கினாராம்.
இதுகுறித்து வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.