திருவாரூர்
வணிகா் தின கொடியேற்று விழா
நீடாமங்கலத்தில் வணிகா் தினத்தையொட்டி, கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலத்தில் வணிகா் தினத்தையொட்டி, கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் வணிகா் சங்கம் சாா்பில், வணிகா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சங்கத்தின் தலைவா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் இளங்கோவன், கமாலுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் செந்தமிழ்ச் செல்வன் கொடியேற்றினாா். இதில், நீடாமங்கலம் வணிகா் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
கடையடைப்பு: வணிகா் தினத்தையொட்டி, நீடாமங்கலம், வலங்கைமான், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களில் வணிகா் தின கொடியேற்றப்பட்டது.