திருவாரூர்
புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்
நீடாமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியிறக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் நவநாள் ஜெபம், கூட்டுத் திருப்பலியும் தொடா்ந்து தோ் பவனியும் நடைபெற்றது.
புதன்கிழமை திருவிழா பாடல் திருப்பலியும், கொடியிறக்கமும்
நடைபெற்றது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அருட்சகோதரிகள், தெருவாசிகள் கலந்து கொண்டனா்.