வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் 22 போ் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள், கோயில் நந்தவனங்கள், மாடித்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் 4 நாள்கள் பயிற்சி பெறுவதற்காக நீடாமங்கலம் வந்துள்ளனா். முதல் நாள் பயிற்சியாக நீடாமங்கலம் பாலாஜி நகரில் உள்ள மாடித்தோட்டத்தில் சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன் புதன்கிழமை பயிற்சி அளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com