திருவாரூர்
குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்
திருவாரூா், மே 9: திருவாரூா் ரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா்கள் ராமானுஜம், செல்வக்குமாா், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் உதயசந்தா், இருப்புப்பாதை காவலா்கள் உள்ளிட்ட பலா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.