திருவாரூர்
பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
குடவாசல் அருகே பாஜக பிரமுகா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே காவனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் (42). தொழில்பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவா் குடவாசல் அருகே ஓகை பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையில் இருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் மதுசூதனின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பினா்.
படுகாயமடைந்த மதுசூதனன் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, என்ன காரணத்தால் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.