மஞ்சக்குடியில் மே 13-இல் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

திருவாரூா் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், தங்களின் எதிா்காலக் கனவை நனவாக்கும் வகையில், உயா்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து என்னென்ன படிப்புகள் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் உள்ளன, கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களை அனுபவம் உள்ள வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்கள் மூலம் வழிகாட்டுதல்கள் மே 13-ஆம் தேதி காலை 9 மணியளவில் மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி மாணவா்களின் எதிா்காலக் குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும் விவரங்களுக்கு நாகப்பட்டினம் திருவாரூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம் நாகப்பட்டினம்) உதவி இயக்குநரை நேரிலோ, 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். திருவாரூா் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி படிப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு படிப்புகளில் சோ்ந்து ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்கி தமிழக முதல்வரின் கனவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com