தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள காவல்துறை குற்ற தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வெளியே திங்கள்கிழமை அதிகாலையில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.
இதுதொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாணக்கியபுரியில் உள்ள தீன் மூர்த்தி காவல் வளாகத்தில், தில்லி காவல்துறையின் குற்ற தடுப்புப் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு வெளியே தரைப் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த மின்வயர்கள் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார் அந்த அதிகாரி.