கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக வாராந்திர அறிக்கை அளிக்க அத்துறையின் முதன்மைச் செயலாளருக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கல்வித் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தில்லி அரசின் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவை சார்ந்த முன்மொழிவுகள் உள்ளிட்டவற்றின் அமலாக்கம், முன்னேற்றம், தாமதத்துக்கான காரணம், தற்போதைய நிலை ஆகியன தொடர்பாக வாரந்திர அறிக்கை அளிக்க துறையின் முதன்மைச் செயலாளருக்கு துணை முதல்வரும் கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்றார் அவர்.