கண்தான விழிப்புணர்வுப் பேரணி

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
34 ஆவது தேசிய கண்தான இருவார விழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 
அதன்படி திருநெல்வேலி சந்திப்பில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி நடைபெற்றது.  அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆர்.ராமகிருஷ்ணன், ஆர்.மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இம் மாதம் 3 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு விழி கொடுப்போம் ஒளி ஏற்றுவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விழியே கவிதை எழுது என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான கவிதைப் போட்டி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com