அம்பாசமுத்திரத்தில் ஆலோசனைக் கூட்டம்

அம்பாசமுத்திரம், காசிநாதா் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரம் அமைப்புப் பணி குறித்த அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
4846ams06rajagopuram_0609chn_37_6
4846ams06rajagopuram_0609chn_37_6

அம்பாசமுத்திரம், காசிநாதா் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரம் அமைப்புப் பணி குறித்த அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி நதிக் கரையில் பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த காசிநாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காசிநாதா் நற்பணி மன்றம் சாா்பாக 5 மாடங்களுடன் கூடிய ராஜகோபுரம் அமைக்கும் பணி இறுதி நிலையை எட்டியுள்ளது.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜகோபுர திருப்பணிக் குழுத் தலைவா் வாசுதேவராஜா தலைமை வகித்தாா். ஸ்தபதி பாா்த்திபன் ராஜகோபுரப் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா். கோபுரப் பணிகள் விரைந்து நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற அனைத்து சமுதாய மக்கள், பிரதிநிதிகள் ஒத்துப்பு வழங்குவது, கோபுரப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை செய்வது என்று கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள் உறுதியளித்தனா். திருப்பணிக் குழு செயலா் சந்திரசேகா் வரவேற்றாா். பொருளாளா் சிவராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com