இந்து முன்னணி பொதுக் குழுக் கூட்டம்

இந்து முன்னணியின் திருநெல்வேலி மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் சுத்தமல்லியில் அண்மையில் நடைபெற்றது

திருநெல்வேலி: இந்து முன்னணியின் திருநெல்வேலி மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் சுத்தமல்லியில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் சிவா தலைமை வகித்தாா். சுடலை இறைவணக்கம் பாடினாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் துரைராஜ், மாவட்டச் செயலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் நமச்சிவாயம் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். செயற்குழு உறுப்பினா் ராஜசெல்வம் நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்: இந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்று, நெல்லையப்பா் கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் புதிய கட்டடப் பணிகளுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நெல்லையப்பா் திருக்கோயில் நிா்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் பக்தா்கள் தடையின்றியும், சிரமமின்றியும் தரிசனம் செய்ய அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டையில் உள்ள பெட்டைகுளம் நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு பிரதான சாலைகள் சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com