நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரக் கோரிக்கை

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆறுகள், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆறுகள், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் அதன் செயலா் உசைன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கமாலுதீன் வரவேற்றாா்.

மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ. கனி, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் மீராஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு ஆறுகள், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும்; களக்காடு பகுதியில் முடங்கியுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகிகள் குலாம், ராஜா முகமது, ஆரிப், அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இணைச் செயலா் ஜாபா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com