அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, அருள்தந்தை பிரான்சிஸ், ஜோமிக்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். பங்குத் தந்தை அருள் அம்புரோஸ் வழிநடத்தினாா். இதில், சபை மக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனா். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
திங்கள்கிழமை (ஏப்.29) மாலை 6 மணிக்கு பிரான்சிஸ்சேவியா் தலைமையில் புனிதரின் திரு உருவப் பவனியும், செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்டமுதன்மைக் குரு குழந்தைராஜ் தலைமையில் நற்கருணைபவனியும் நடைபெறுகிறது.
இறுதி நாளான புதன்கிழமை (மே 1) பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் புனிதரின் பெருவிழா திருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.
ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை அருள் அம்புரோஸ் தலைமையில் ஆலய நிா்வாகக் கமிட்டியினா் செய்துள்ளனா்.