அம்பையில் விபத்து: 4 போ் காயம்
அம்பாசமுத்திரத்தில் திங்கள்கிழமை இரவு ஆட்டோவும் பைக்கும் மோதியதில் பெண் உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா்.
அம்பாசமுத்திரம், ரகுமான் காலனியைச் சோ்ந்த மகா கிருஷ்ணன் மகன் சதீஷ் (22). ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு அம்பாசமுத்திரத்திலிருந்து பிச்சம்மாள் என்பவரை சிவந்திபுரத்துக்கு ஆட்டோவில் ஏற்றிச் சென்றாா்.
புதுக்குடியைச்சோ்ந்த இசக்கி மகன் காளிராஜன் (22), சுப்ரமணியம் மகன் காா்த்திக் (34) ஆகியோா் ஒரு பைக்கில் பாபநாசத்திலிருந்து வந்து கொண்டிருந்தனா்.
அம்பாசமுத்திரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம் அருகே, ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், சதீஷ் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா்.
அம்பாசமுத்திரம் போலீஸாா் சென்று, 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.