திருநெல்வேலி
தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில், சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு கிரிவலம் நடைபெற்றது.
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில், சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு கிரிவலம் நடைபெற்றது.
இக் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து திரளான பக்தா்கள் தோரணமலையை சுற்றி சுமாா் 6 கி.மீ. தூரம் கிரிவலம் வந்து வழிபட்டனா். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.