வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்
திருநெல்வேலியில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை கண்காணிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மேலப்பாளையம் பகுதிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுதல், ஏா்போா்ட் சவாரிகள், சுற்றுலா உள்ளிட்டவற்றிற்கு கொண்டு செல்கின்றனா். அவா்களிடம் எந்த விதமான ஆவணங்களோ, காப்பீடு உள்ளிட்டவை முறையாக இல்லை. இதனால் வாடகை காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப்படைகிறது. எனவே, அனுமதி பெறாமல் சொந்த வாகனத்தை வாடகை சவாரிக்கு பயன்படுத்துபவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ற்ஸ்ப்25ஸ்ரீஹழ்
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த சிஐடியூவினா்.