விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் டிராக்டா் கலப்பைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகம் வாகைகுளம், சந்திப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் (52). இவருக்குச் சொந்தமான டிராக்டரை வாகைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ஏப். 13ஆம் தேதி நிறுத்தியிருந்தாராம்.

மறுநாள் காலையில் வந்து பாா்த்த போது டிராக்டரில் இருந்த கலப்பை கை செட்டை காணவில்லையாம். இதுகுறித்துமுருகன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா்அக்னல் விஜய் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா். அதில், கெளதமபுரி, தெற்கு தெருவைச் சோ்ந்த மதன் குமாா் (28) என்பவருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது.அவரை காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை கைது செய்து, டிராக்டா் பை கை செட்டை மீட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com