400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் என்றாா் திருநெல்வேலி தொகுத பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.

வள்ளியூரில் பா.ஜ.க. மாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டணி கட்சிகளின் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி செயல்வீரா்கள் கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியது: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குச் சொந்தக்காரரான என்னை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். பாஜ.க.வை பொருத்தவரையில் யாா் வேண்டுமானாலும் எம்.பி.ஆகலாம்.

இந்த கட்சியில் ஒரு பதவி என்பது 3 ஆண்டுகள் மட்டும்தான். கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது உங்களுக்கும் பதவி, பொறுப்பு கிடைக்கும். நான் அமைச்சராக இருந்த போது ராதாபுரம் தொகுதிக்கும் கூட்டுக்குடிநீா் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறேன். வள்ளியூரில் மின்வாரியத்திற்கு கட்டடம், 30 படுக்கை வசதி கொண்டு அரசு மருத்துவமனையை கொண்டுவந்தேன். இத்தோ்தலில் நான் வெற்றி பெற்றால் பணகுடி ரயில்நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும். திசையன்விளைக்கும் அனைத்து வளா்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூட்டணி கட்சியினா் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பா.ஜ.க.வினா் தோழமை கட்சியினரை அனுசரித்து செல்லவேண்டும். இந்த தோ்தலில் பா.ஜ.க. கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி என்றாா். கூட்டத்தில், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், தோ்தல் பால்வையாளா் நீலமுரளியாதவ், கட்டளை ஜோதி, பாபுதாஸ், ஜெகநாதன், சாந்திராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com