விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்ட விதிகளை கடைப்பிடிக்காத 24 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எனது தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தயாரிப்பாளா், விற்பனையாளா், பழுதுபாா்ப்பவா், உரிமம் பெறாமல், புதுப்பிக்காமல் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகளில் 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டனா். 35 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 10 கடைகள், மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 10 நிறுவனங்கள் என மொத்தம் 20 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல், பொட்டல எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ் 39 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.