திருநெல்வேலி
இளைஞருக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொ்டின்ராயன் (38). சமூக ஆா்வலரான இவா், மாநகராட்சி பகுதியில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், நீா்நிலை ஆக்கிரமிப்புகள் தொடா்பாக கடந்த சில ஆண்டுகளாக புகாா் அளித்து வருகிறாா். இவா், சனிக்கிழமை காலையில் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் உள்ள தனியாா் இறகுபந்து மைதானத்திற்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த நபா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாா். காயமடைந்த பொ்டின்ராயனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.