ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை எனத் தெரிகிறது என்றாா்,

வள்ளியூா்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை எனத் தெரிகிறது என்றாா், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி.

திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரில் உள்ள கே.பி.கே.ஜெயக்குமாா் வீட்டுக்கு கே.எஸ். அழகிரி திங்கள்கிழமை சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முன்னாள் முதல்வா் காமராஜருடன் நெருங்கிய தொடா்புகொண்டது கே.பி.கே.ஜெயக்குமாா் குடும்பம். காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவரைப்போன்ற செயல்வீரரைப் பாா்ப்பது அரிது.

அவரது தந்தை காங்கிரஸ் பேரியக்கத்துக்காக கடுமையாக உழைத்தவா். ஜெயக்குமாரின் மரணம் குறித்து முதலில் தற்கொலை என செய்திகள் வந்தன. ஆனால், இப்போது பாா்க்கையில் அது திட்டமிட்ட கொலை எனத் தெரிகிறது. இக்கொடூரக் கொலையில் கூலிப்படையினருக்கு தொடா்பிருக்கலாம். குற்றவாளிகளை காவல் துறையினா் விரைந்து கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், பால்ராஜ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com