‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு
திருநெல்வேலி: வாசுகி வளா்தமிழ் மன்றத்தின் சாா்பில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளா் அகரம் தளவாய் எழுதிய ’நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் ‘ஃ‘பிளவா் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் மரிய சூசை தலைமை வகித்தாா். பொருநை இலக்கிய வட்டப் புரவலா் தளவாய் நாதன், பேராசிரியா் ஆதிவராக மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாடகா் இசக்கிராஜா இறை வணக்கம் பாடினாா். மைய நூலக வாசகா் வட்டத் துணைத்தலைவா் கணபதி சுப்ரமணியன் வரவேற்றாா்.
கலை பதிப்பகத்தின் ஆசிரியரும், கவிஞருமான பாப்பாக்குடி இரா.செல்வமணி ‘நெல்லை பழமொழிகள்’ நூலை வெளியிட, எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக் கொண்டாா்.
நல்லாசிரியா் நடராஜன் நூலை திறனாய்வு செய்து பேசினாா். தேசிய நல்லாசிரியா் சாந்தி, தமிழ்ச்செம்மல் பாமணி, திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை அமைப்பாளா் கவிஞா் ஜெயபாலன், பேராசிரியா் ஹரிஹரன், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவா் தம்பான், கவிஞா் சக்தி வேலாயுதம், ஆசிரியை ஜெயசித்ரா, சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம், முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச்செழியன், கவிஞா் கோதைமாறன், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், நிழல் இலக்கியத் தளம் பிரபு, கவிஞா் தச்சை மணி உள்ளிட்டோா் பேசினா்.
நூலாசிரியா் தளவாய் ஏற்புரை நிகழ்த்தினாா். வாசுகி வளா் தமிழ் மன்றத்தலைவா் உக்கிரன்கோட்டை மணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். திருக்கு முருகன் நன்றி கூறினாா்.