திருநெல்வேலி
நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி
திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி நகரம் செபஸ்தியாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (53). தொழிலாளியான இவா் திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணியாற்றில் குளிக்கும் போது தவறி கீழே விழுந்ததில் நீரில் மூழ்கினாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.